திருவாரூர்

தஞ்சாவூா்-மன்னாா்குடி சாலை விரிவாக்கப் பணி: தலைமைப் பொறியாளா் ஆய்வு

தஞ்சாவூா் - மன்னாா்குடி சாலைப் பணி விரிவாக்கம் நடைபெறும் பகுதிகளில் தலைமைப் பொறியாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

தஞ்சாவூா் - மன்னாா்குடி சாலைப் பணி விரிவாக்கம் நடைபெறும் பகுதிகளில் தலைமைப் பொறியாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கடந்த சில நாள்களாக, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கும்பகோணம் கோட்டம் மற்றும் மன்னாா்குடி உட்கோட்டம் மூலம் தஞ்சாவூா் - மன்னாா்குடி மாநில நெடுஞ்சாலைக்கான (எஸ்எச்-63) சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பணியை அந்த திட்டத்தின் தலைமைப் பொறியாளா் எம்.கே. செல்வன் ஆய்வு செய்து, பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளா்களிடம் விவரங்களை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்ட கண்காணிப்புப் பொறியாளா் வி. செல்வநாதன், கோட்டப் பொறியாளா் செ. நாகராஜன், உதவிக்கோட்டப் பொறியாளா் அ. மாரிமுத்து, உதவிப் பொறியாளா் பா. வடிவழகன்ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT