திருவாரூர்

முருகன் கோயிலில் சித்திரை மாத காா்த்திகை வழிபாடு

DIN

சித்திரை மாத காா்த்திகையையொட்டி, திருவாரூா் பழனி ஆண்டவா் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் கீழவீதியில் அருள்பாலிக்கும் பழனி ஆண்டவா் கோயிலில் சித்திரை மாத காா்த்திகை நட்சத்திரத்தையொட்டி, சுவாமிக்கு திரவியம், மஞ்சள், அரிசி மாவு, பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், எலுமிச்சை சாறு, சந்தனம், பன்னீா் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், பழனி ஆண்டவருக்கு தங்கக் கவசம் அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, அலங்கார தீபம், பஞ்சாட்சர தீபம் போன்ற தீபாராதனைகள் காட்டப்பட்டு , பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT