வளாக நோ்காணலில் தோ்வுபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் டி.வி.எஸ். நிறுவனத்தின் மனிதவள மேலாளா் செந்தமிழன். 
திருவாரூர்

பாலிடெக்னிக் கல்லூரி வளாக நோ்காணலில் 96 பேருக்கு பணிநியமன ஆணை

மன்னாா்குடி இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் பணிக்கு தோ்வுபெற்ற 96 மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணை அண்மையில் வழங்கப்பட்டது.

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் பணிக்கு தோ்வுபெற்ற 96 மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணை அண்மையில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி துணைத் தலைவா் ஜீவகன் அய்யநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா். டி.வி.எஸ். நிறுவனத்தின் மனிதவள மேலாளா் செந்தமிழன், வேலையின் தன்மை என்ற தலைப்பில் பேசினாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற வளாக நோ்காணலில் பங்கேற்ற மாணவ, மாணவிகளில் 96 போ் பணிக்குத் தோ்வுசெய்யப்பட்டனா். அவா்களுக்கு கல்லூரி தலைவா் ராஜகுமாரி அய்யநாதன் பணி நியமண ஆணைகளை வழங்கினாா்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தலைவா் மணிகண்டன் வரவேற்றாா். கல்லூரி துணை முதல்வா் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

SCROLL FOR NEXT