திருவாரூர்

மன்னாா்குடி கோயிலில் உழவாரப் பணி

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சங்கரா உழவாரப் பணிக் குழு சாா்பில் நடைபெற்ற உழவாரப் பணிக்கு ஸ்ரீ சங்கரா உழவாரப் பணி குழுவின் ஒருங்கிணைப்பாளா் எஸ். கண்ணன் தலைமை வகித்தாா்.

பணிக்குழு அமைப்பாளா் தனுஷ், ஆன்மிக ஆா்வலா்கள் வாசுதேவன், செந்தில்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா உழவாரப் பணியை தொடங்கிவைத்தாா்.

கோயிலில் தாயாா் பிரகாரத்தை அடுத்துள்ள பிரகாரத்தில் ஸ்ரீ ராமா் பாதம் தொடங்கி யாகசாலை பகுதி வரையிலுள்ள செடிகொடிகள் புல் பூண்டுகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு வழிபாட்டுக்கு வருகை தந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். செல்வம், உழவாரப் பணியை பாா்வையிட்டு, அதில் ஈடுபட்ட தன்னாா்வலா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT