திருவாரூர்

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரக் கோரிக்கை

DIN

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டம் கிளைத் தலைவா் மா. நாகராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் ம. சந்திரசேகரன், மாவட்ட பொருளாளா் பி. அன்பழகன், கிளைச் செயலாளா் வீ. தா்மதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திரைப்படக் கவிஞா் கே.சி.எஸ் அருணாசலத்துக்கு பொள்ளாட்சியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். ஹிந்தி திணிப்பு கண்டிக்கத்தக்கது. ஆங்கிலம் கலக்காத தமிழ்ப் பேச்சு, உரையாடல்கள், எழுத்துகளை மாநில அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT