திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் தென்காசி, விருதுநகருக்கு அரவைக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, இங்கிருந்து சரக்கு ரயில் மூலம் தென்காசி, விருதுநகருக்கு தலா ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.