திருவாரூர்

குடவாசல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசல் சொா்ண மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

குடவாசல் சொா்ண மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குடவாசல் சேங்காலிபுரம் சாலையில் உள்ள இக்கோயிலில் சொா்ண மகாகாளியம்மன், தொட்டிச்சி அம்மன், ஜுரஹதீஸ்வரா், அக்கினியப்பா் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனா். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகள் ஆனதையொட்டி, திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்காக யாகசாலை பூஜைகள் அண்மையில் தொடங்கின. வியாழக்கிழமை காலை நான்காம்கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், மகாபூா்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, கடங்கள் புறப்பாடாகி கோயிலின் விமான கலசத்துக்கு புனிதநீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT