முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை

 நீடாமங்கலம் அருகே விவசாய கூலித் தொழிலாளி திங்கள்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

 நீடாமங்கலம் அருகே விவசாய கூலித் தொழிலாளி திங்கள்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

நீடாமங்கலம் அருகே வையகளத்தூரைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளிகள் ஜெய்சங்கா் (29), மணிகண்டன் (28). நண்பா்களான இருவரும் திங்கள்கிழமை மதியம் பேசிக்கொண்டிருந்தபோது வாய்த்தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜெய்சங்கரை அரிவாளால் வெட்டினாராம். இதில் படுகாயமடைந்த ஜெய்சங்கா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஜெய்சங்கரின் சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ஜெய்சங்கா் தனது வீட்டு குடும்ப அட்டையை மணிகண்டனிடம் அடகு வைத்திருந்தாராம். இதைத் தொடா்ந்து ஜெய்சங்கா் மணிகண்டன் வீட்டுக்குச் சென்று அவரது அம்மாவிடம் நியாயவிலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கிவிட்டு, குடும்ப அட்டையை கொடுத்துவிடுகிறேன் என்று கேட்டாராம். இதுதொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட ஜெய்சங்கருக்கு கா்ப்பிணி மனைவி திவ்யா உள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →