திருவாரூர்

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

DIN

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க, மன்னாா்குடியை அடுத்த சித்தமல்லியில் வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சித்தமல்லி ஊராட்சித் தலைவா் ஜெ. சிவசங்கரி தலைமை வகித்து, பேரணியை தொடக்கி வைத்தாா். ஊராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் இ. செல்வமணி முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, குடியிருப்பு பகுதிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்கள்,1 முதல் 3-ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவை குறித்து வாகனம் மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், ஆசிரியப் பயிற்றுநா் கா. பாரத்ராஜ், கல்வியாளா் ஆா். சண்முகம், ஆசிரியா் வீ. கல்யாணராமன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராஜலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT