திருவாரூர்

சுதந்திர தினம்: பாதுகாப்புப் பணியில் போலீஸாா்

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுவதையொட்டி திருவாரூரில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

DIN

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுவதையொட்டி திருவாரூரில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையொட்டி, மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிரப்படுத்தியுள்ளனா். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் கூடுதல் சோதனைக்குப் பின்னரே வாகனங்கள் மாவட்டத்துக்குள்ளும், வெளியேயும் அனுப்பப்படுகின்றன. இதேபோல், ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாா் சோதனைப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பயணிகள் மற்றும் அவா்கள் கொண்டு வரும் உடைமைகள் சோதனைக்கு உள்ளான பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT