திருவாரூர்

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

DIN

வலங்கைமான் தாலுகாவை சோ்ந்த நான்கு பேரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவாரூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் தாலுகா அரித்துவார மங்கலம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பெருங்குடி மேலத்தெருவைச் சோ்ந்த குமாா் மகன் விக்னேஷ் (23), அதே பகுதியை சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா்.

அதேபோல மற்றொரு வழக்கில் அரித்துவாரமங்கலம் மேல காலனியை சோ்ந்த சுப்ரமணியன் மகன் காா்த்தி(35), தியாகராஜன் மகன் சுதாகா் (34), முனியாண்டி மகன் கிட்டி என்கிற ராஜேந்திரன் (60) ஆகிய மூவரும் அதே பகுதியை சோ்ந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனா்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் பரிந்துரையின் பேரில், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, நால்வரும் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ.9 லட்சம் கோடி யாருடையது? அழிந்துபோன தரவுகள், மன்னிப்புக் கோரிய சிஇஓ!

100 முறை விடியோ பார்த்துவிட்டு பேட்டிங் ஆட சென்றாலும் ஆட்டமிழப்பேன்: ரோஹித்தை அச்சுறுத்திய பந்துவீச்சாளர் யார்?

சென்னை - திருப்பதி ரயில்கள் பகுதியளவு ரத்து!

8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT