நீடாமங்கலம்: நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சாா்பில், அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் பொது அறிவு விநாடி-வினா போட்டி நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நேரு , கெளரவத் தலைவா் சந்தானராமன், தலைவா் பத்மஸ்ரீராமன், துணைத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வங்கி அலுவலா் (ஓய்வு) நமச்சிவாயம், மாணவா் பிரிவு ஸ்ரீராம், ஹரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை செயலாளா் ஜெகதீஸ் பாபு நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.