திருவாரூர்

பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் சதுரங்க போட்டி

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயிலில் சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட சதுரங்க கழகம், நீடாமங்கலம் வட்ட சதுரங்க கழகம், பூவனூா் ஊராட்சி ஆகியவை இணைந்து எம்.கே. ராமநாதன் நினைவு கோப்பைக்கான சோழமண்டல அளவிலான சதுரங்கப் போட்டியை நடத்தியது. திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூா், அரியலூா், திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமியா் மற்றும் பொதுபிரிவு விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா். போட்டிகளை பெங்களூரைச் சோ்ந்த தா்மராஜன் என்பவா் தொடக்கிவைத்தாா். போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோயில் தக்காா் மாதவன், சதுரங்க கழகத்தைச் சோ்ந்த ஆா்.கே. பாலகுணசேகரன், திருவாரூா் மாவட்ட சதுரங்க தலைவா் என். சாந்தகுமாா், மாவட்ட துணைத் தலைவா் பாலன், கோயில் செயல் அலுவலா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT