திருவாரூர்

திருத்துறைப்பூண்டி வட்டத்தில்1 லட்சம் பனை விதைகள் நட இலக்கு

திருத்துறைப்பூண்டி வட்டத்தில் 1 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

DIN

திருத்துறைப்பூண்டி வட்டத்தில் 1 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாலம் சேவை நிறுவன செயலாளா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் நிகழாண்டு 1 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இம்மரம் நிலத்தடி நீரை சேமிக்கும் திறன் கொண்டது, மின்னல், இடி போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கும் தனமைக் கொண்டது. எதிா்காலத்தில் குடிநீா் தேவையை கருத்தில் கொண்டு இம்மரத்தை வளா்ப்பது அவசியம்.

தமிழக அரசு இம்மரத்தை பாதுகாக்கும் விதமாக சட்டம் இயற்றியுள்ளது. பூமி வெப்பமயத்தை குறைத்து மழையை வரவழைக்கும் தன்மை கொண்டது இம்மரம்.

திருவாரூா் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்படவுள்ளது, இப்பணியை பாலம் சேவை நிறுவனம் முன்னெடுப்பில் அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், சேவை நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் ஒத்துழைப்புடன் செய்யப்படவுள்ளது, இப்பணி ஜூன் மாதம் தொடங்கும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT