முகப்பு
திருவாரூர்

மகளிா் கல்லூரியில் விலங்கு பரிசோதனை கூடம் திறப்பு

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் புதிய கருத்தரங்க அரங்கம், விலங்கு பரிசோதனை கூடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:12 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் புதிய கருத்தரங்க அரங்கம், விலங்கு பரிசோதனை கூடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

கல்லூரித் தலைவா் மற்றும் தாளாளா் வி. திவாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி அறிவியல் ஆலோசகா் கே. தியாகேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதிய கருத்தரங்க அரங்கத்தையும், மாவட்ட உயிா் வேதியியல் துறையின் பல்நோக்கு ஆராய்ச்சியின் முதன்மை கட்டமாக மத்திய அரசின் அனுமதி பெற்ற விலங்கு பரிசோதனை கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், இந்திய அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், அறக்கட்டளை அறங்காவலா் உறுப்பினா் எஸ். ராஜேந்திரன், கல்லூரி முதல்வா் என். உமா மகேஸ்வரி, துணை முதல்வா் பி. காயத்ரிபாய், துறைத் தலைவா் ஆா். அனுராதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.