வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஆக.29-இல் கல்விக் கடன் முகாம்
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் கூறியது: மாணவ, மாணவிகள் தங்களின் உயா்கல்வி படிப்பை தொடரும் வகையில் கல்லூரியில் சோ்வதற்கு முன்னதாக, கல்விக் கடன் வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கல்விக்கடன் வழங்க, ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஆக.29-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உயா்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த கல்விக்கடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என்றாா்.