முகப்பு
செய்திகள்

படப்பிடிப்பை முடித்த கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜின் புதிய திரைப்படம் குறித்து...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 5:30 AM
கார்த்திக் சுப்புராஜ் - x
பகிர்:

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

தமிழில் ஸ்டைலான மேக்கிங் திறன் கொண்ட இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். ஜிகிர் தண்டா, மகான், ஜகமே தந்திரம், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்களில் உருவாக்க ரீதியாகவும் கவர்ந்தார்.

இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால், சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் விமர்சித்தனர்.

தொடர்ந்து, புதுமுக நடிகர்களை வைத்து சுயாதீன படமொன்றை இயக்கி வந்தார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதனைப் பல திரைவிழாக்களுக்கு அனுப்பி பின் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

summary

director karthik subbaraj wrapped his next movie shoot

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.