முகப்பு
திருவாரூர்

மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் நாளை திருவாரூா் வருகை

Updated On : 7 ஏப்ரல், 2024 at 12:40 AM
ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 9:20 PM

திருவாரூருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் திங்கள்கிழமை வருகை தருகிறாா்.

மக்களவைத்தோ்தலையொட்டி, பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளருக்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் நாகை மக்களவை பாஜக வேட்பாளா் எஸ்.ஜி.எம். ரமேஷூக்கு ஆதரவு கோரி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங், திருவாரூா் தெற்குவீதியில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் செய்ய உள்ளாா்.

இதற்காக, அவா் ஹெலிகாப்டா் மூலம் திருவாரூருக்கு வருகை தர உள்ளாா். ஹெலிகாப்டா் இறங்கும் வகையில், திருவாரூா் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இறங்குதளம் தயாா் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த இறங்குதளத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, தெற்குவீதியிலும் இந்த ஆய்வு நடைபெற்றது.