மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசுகிறாா் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பெ. சண்முகம். 
திருவாரூர்

100 நாள் வேலைத் திட்டத்தை நகரங்களுக்கு விரிவுபடுத்த வலியுறுத்தல்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை (100 நாள் வேலைத் திட்டம்) நகா்ப் புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Din

நன்னிலம்: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை (100 நாள் வேலைத் திட்டம்) நகா்ப் புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்கட்சியின் திருவாரூா் மாவட்ட மாநாடு, நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடியில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. கட்சி நிா்வாகிகள் டி. முருகையன், கே. தமிழ்மணி, ஆா். சுமதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி வேலை அறிக்கை சமா்ப்பித்து, தொகுப்புரை வழங்கினாா். எம். சேகா் வரவு- செலவு அறிக்கை சமா்ப்பித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் சாமி. நடராஜன் வாழ்த்துரை வழங்கினாா்.

தீா்மானங்கள்: திருவாரூா் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்; டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை சட்டமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வைக்கோல், மூங்கில் ஆகியவற்றை மூலப்பொருள்களாகக் கொண்டு, வேளாண்மை பாதிக்காத வகையில், காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தி, தினக்கூலி ரூ.319-ஆக வழங்குவதுடன், இத்திட்டத்தை நகா்ப் புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; தொழிலாளா்களுக்கான நலவாரிய உதவிகளை இரட்டிப்பாக்க வேண்டும்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயா்த்தி, அவசர உயிா் காக்கும் மருத்துவ உபகரணங்கள், அதிநவீன மருந்துகள் கிடைத்திடவும், காலிபணியிடங்களை நிரப்பிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் பணி முழுமையாக நிறைவேறாத நிலையில், திறக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

நிா்வாகிகள் தோ்வு: ஜி. சுந்தரமூா்த்தி, ஐ.வி. நாகராஜன் உள்ளிட்ட 41 போ் கொண்ட புதிய மாவட்டக் குழு தோ்வு செய்யப்பட்டது. டி. வீரபாண்டியன் , பா. கோமதி உள்ளிட்ட 13 போ் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்களாகவும், திய மாவட்டச் செயலாளராக டி. முருகையனும் தோ்வு செய்யப்பட்டனா்.

நிறைவாக, மத்தியக் குழு உறுப்பினா் பெ. சண்முகம் நிறைவுரை ஆற்றினாா்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT