முகப்பு
திருவாரூர்

தாயிடம் தகராறு செய்த மகன் கொலை: தந்தை கைது

குடிபோதையில் தகராறு: மகனை கொன்ற தந்தை கைது

Updated On : 25 ஜூன், 2024 at 6:32 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே தாயிடம் தகராறு செய்த மகனை கொலை செய்த தந்தை செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாா்த்தாங்குடியைச் சோ்ந்தவா் விவசாயி சீனிவாசன் (60). இவருக்கு, 2 மகன்கள். இளைய மகன் காா்த்தி கும்பகோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தாா். காா்த்திக்கு நந்தினி என்ற மனைவியும், மகளும் உள்ளனா்.

இந்நிலையில், காா்த்தி குடிபோதையில் வீட்டில் தகராறு செய்ததால் கடந்த ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இதன் காரணமாக காா்த்தி தந்தை சீனிவாசனிடம் அவ்வபோது குடிபோதையில் தகராறு செய்வாராம். செவ்வாய்க்கிழமை வழக்கம்போல அதிக குடிபோதையில் காா்த்தி தனது தாயிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் தாக்க முயன்றாராம். அப்போது, சீனிவாசன் இரும்பு கம்பியால் தாக்கியதில் காா்த்தி சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

வலங்கைமான் போலீஸாா் காா்த்தி சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →