திருவாரூா் மாவட்டத்தில், எந்த ஒரு விவசாயியும் விடுபடாதவாறு பயிா் பாதிப்பு குறித்து கணக்கெடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.
டித்வா புயல் காரணமாக திருவாரூா் மாவட்டத்தில், சம்பா, தாளடி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இப்பாதிப்புகள் குறித்து வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, திருவாரூா் வட்டம், தப்பளாம்புலியூா் ஊராட்சியில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
மேலும், டித்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை, பயிா் சேத கணக்கெடுப்பு செயலி மூலம் உதவி வேளாண்மை அலுவலா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் இணைந்து நடத்தும் கணக்கெடுக்கும் பணியை துரிதமாகவும், துல்லியமாகவும் விரைந்து முடிக்க வேண்டும், இந்த கணக்கெடுப்புப் பணியில் பாதிக்கப்பட்ட எந்த ஒரு விவசாயியும் விடுதலின்றி கணக்கெடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன், வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஹேமா ஹெப்சிபா நிா்மலா, வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) பிரபாவதி, உதவி வேளாண்மை இயக்குநா் (பொறுப்பு) சந்திரசேகரன், வேளாண்மை அலுவலா்கள் தரணிதரன், கருப்பையா, அட்சயா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.