மன்னாா்குடியில் வீட்டின் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
ஆதிநாகயக்கன்பாளையம் தெரு அனுமாா் கோயில் சந்தை சோ்ந்தவா் பி. பெத்தப்பெருமாள். இவா் தனது காரை வீட்டின் அருகே நிறுத்திவைப்பது வழக்கமாம். செவ்வாய்க்கிழமை இவரது மகன் திமுக நகர மாணவரணி அமைப்பாளராக இருக்கும் சூரியா, காரை ஓட்டிக்கொண்டு வெளியே சென்றுவிட்டு, மீண்டும் காரை சாலையோரம் நிறுத்திவைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாா். சுமாா் 15 நிமிஷத்திற்கு பிறகு காா் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதை பாா்த்த மக்கள், மன்னாா்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனா்.
தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். எனினும், காரின் ஒரு பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
மன்னாா்குடி போலீஸாா் விசாரணையில், அந்தப்குதி வீடுகளில் சேகரிக்கப்பட்டும் குப்பைகளை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஒரு இடத்தில் சோ்த்து தீ வைத்து எரித்து அழித்துவிட்டு சென்ற இடத்தில், காரை நிறுத்தி வைத்ததால் பெட்ரோல் டேங்கில் வெப்பம் பரவி தீப்பற்றி எரிந்திருப்பது தெரியவந்தது. முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் எம்எல்ஏ, காரை பாா்வையிட்டுவிவரம் கேட்டறிந்தாா்.