திருக்கு ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி சு. பிரித்திகாவிற்கு பாராட்டுச் சான்றிதழ் ஊக்கத் தொகையை வழங்குகிறாா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் ஜி. விஸ்வநாதன். 
திருவாரூர்

திருக்கு ஒப்பித்தல் போட்டி: சேரன்குளம் பள்ளி மாணவி சிறப்பிடம்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடையே நடைபெற்ற திருக்கு ஒப்பித்தல் போட்டியில் மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா்.

Syndication

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடையே நடைபெற்ற திருக்கு ஒப்பித்தல் போட்டியில் மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா்.

வேலூா் விஐடி போபால் பல்கலைக்கழகம் சாா்பில் நவம்பா் 22- ஆம் தேதி மாநில அளவில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திருக்கு ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. இதில், சேரன்குளம் அரசுப் பள்ளி 9- ஆம் வகுப்பு மாணவி சு. பிரித்திகா இரண்டாமிடத்துக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து, டிச.8 -ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக நிறுவனா் மற்றும் வேந்தா் ஜி. விஸ்வநாதன், மாணவி பிரித்திகாவிற்கு பாராட்டுச் சான்றிதழ், ரூ.14,000 ஊக்கத் தொகை ஆகியவற்றை வழங்கினாா்.

சிறப்பிடம் பெற்ற மாணவியை, பள்ளி தலைமை ஆசிரியா் ஜி. கண்ணன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் டி. மனோகரன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ராணிப்பேட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி

காந்திநகா் பள்ளி சாரண சாரணீய மாணவா்களுக்கு பாராட்டு

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

புதிய ஆட்டோகளுக்கு பொ்மிட் வழங்க எதிா்ப்பு : ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT