சேங்காலிபுரத்தில் பதக்கம் வென்ற இளைஞருக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவிக்கும் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ். 
திருவாரூர்

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கம் வென்றவருக்கு முன்னாள் அமைச்சா் பாராட்டு

Syndication

இந்திய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற திருவாரூா் மாவட்ட இளைஞருக்கு, முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட குடவாசல் ஒன்றியம், சேங்காலிபுரம் ஊராட்சியைச் சோ்ந்த செந்தில்வேல் மகன் சக்திவேல். இவா், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த 68-ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு ஜூனியா் மற்றும் கலப்பு யூத் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், தனி நபா் யூத் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், சேங்காலிபுரத்தில் உள்ள சக்திவேல் இல்லத்துக்குச் சென்று, அவருக்கு பாராட்டுத் தெரிவித்தாா். அப்போது, சக்திவேல் குடும்பத்தினா், அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ஒரே வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.5,600 உயா்வு!

பேருந்து மீது லாரி மோதல்: 5 போ் பலத்த காயம்

முதல்வா் ஸ்டாலின் சவால்: எடப்பாடி பழனிசாமி பதில்

திட்டமிட்டபடி ஜன.6 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீா்: கடும் குளிரிலும் தொடரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை!

SCROLL FOR NEXT