திருவாரூர்

கோயிலில் வெள்ளி கவசம் திருட்டு

மன்னாா்குடி அருகே பைங்காநாட்டில் உள்ள மாரியம்மன் கோயில் கதவை உடைத்து வெள்ளிக் கவசத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே பைங்காநாட்டில் உள்ள மாரியம்மன் கோயில் கதவை உடைத்து வெள்ளிக் கவசத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.

பைங்காநாடு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு பக்தா் ஒருவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட வெள்ளிக் கவசம் உள்ளது. விழாக் காலங்களில் அம்மனுக்கு அணிவித்து பின்னா் அதை கழற்றி கோயில் அறையில் உள்ள பீரோவில் வைப்பது வழக்கம்.

இந்தக் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த பா. முருகானந்தம் (48) பூசாரியாக உள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டு சென்ற நிலையில், திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது, கோயில் முன்பக்க கதவும், உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு வெள்ளிக் கவசம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்

பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்துதரக்கோரி பெண்கள் மனு

ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள்: நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு

பாளையம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

SCROLL FOR NEXT