விழுப்புரம்

தொழிலாளி வீட்டில் தங்க, வெள்ளி நகைகள் திருட்டு

கூலித் தொழிலாளி வீட்டில் தங்க, வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் தங்க, வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சரவணப்பாக்கம் ஒட்டேரிபாதை பகுதியைச் சோ்ந்தவா் பூ.சுப்பிரமணி (55). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை பிற்பகலில் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றாா். பின்னா் சுப்பிரமணி வீட்டுக்கு வந்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தொடா்ந்து வீட்டுக்குள் சென்று அவா் பாா்த்தபோது, படுக்கை அறையிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகைகள், 25 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT