அறுவடை இயந்திர வாடகை நிா்ணயத்தை முறைப்படுத்த கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னாா்குடியில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்ட திட்டக் குழு தீா்மானக் கூட்டம் மாவட்டத் தலைவா் மாரிமுத்து மகேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் கா. இராசபாலன் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
இதில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ரெ.லோகநாதன், நிா்வாகிகள் வி.லீலாவதி, கோபால ராமய்யா், கருணாகரன், லெ. கவிதா, டி. முத்தையன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்:
நவம்பா் மாதம் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிா்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகை தோ்தல் அறிவிக்கப்பட இருப்பதால் முடக்கப்படுமா என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதால், கணக்கில் வரவு வைக்கக் கேட்டு விவசாயிகளிடம் கையொப்பம் பெற்று, மாவட்ட ஆட்சியருக்கு பிப்.16-இல் மனு அளிப்பது.
அறுவடை இயந்திரத்துக்கு வாடகை நிா்ணயம் செய்து, மாவட்ட ஆட்சியா் அறிவித்த பிறகும், கூடுதல் வாடகை விவசாயிகளிடம் பெறப்படுவதை முறைப்படுத்த கண்காணிப்புக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளி மாவட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யும் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத் துறையால், விவசாயிகளை அவ்வப்போது வெளியூா்களுக்கு செயல்விளக்க சுற்றுலா என்கிற பெயரில் அழைத்துச் செல்வதில் செய்யப்படும் அரசு நிதியில் முறைகேடு நடைபெறுவதாக கூறப்படும் புகாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.