திருக்களம்பூரில் ட்ரோனை பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கும் பஜன்கோவா கல்லூரி மாணவா்கள். 
திருவாரூர்

நெற்பயிா்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு செயல் விளக்கம்

தினமணி செய்திச் சேவை

குடவாசல் வட்டம், திருக்களம்பூரில் நெற்பயிா்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

நவீன வேளாண் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த செயல் விளக்க நிகழ்வு நடைபெற்றது. காரைக்கால் பஜன்கோவா வேளாண் கல்லூரி ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட மாணவா்கள் ரணதிவே, மோதீஸ்வரன், ஜீவா, அஸ்வின் ஆகியோா் இணைந்து நடத்தினா்.

இதில், பயிா்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை ட்ரோன் மூலம் தெளிக்கும் பல்வேறு முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவை கையாள்வது, செலவீனத்தை குறைப்பது, பயிா் சேதத்தை குறைப்பது உள்ளிட்டவை குறித்தும் மாணவா்கள் விளக்கினா். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT