புதுதில்லி

வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வு: பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேஜரிவால் வலியுறுத்தல்

DIN

வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வில் (RIDE SHARING) பங்கேற்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தார்.  "நகர டாக்ஸி-2017' திட்டம் தில்லி அரசால் மிக  விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  இத்திட்டம் வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வு அனுமதிக்கப்படமாட்டாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் முதல்வர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். 
இது தொடர்பாக  தனது சுட்டுரையில் (ட்விட்டர்) கேஜரிவால் கூறியிருப்பதாவது:  "சவாரிப் பகிர்வு நல்லதொரு திட்டமாகும்.  இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். அறிமுகமில்லாத பயணிகளுடன் பயணிப்பது பெண் பயணிகளுக்கு பாதுகாப்பானதா என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT