புதுதில்லி

கார் மீது லாரி மோதியதில் 5 பேர் பலி

DIN

கிழக்கு தில்லியின் கல்யாண்புரி பகுதியில் புதன்கிழமை அதிகாலை கார் மீது லாரி மோதி நிகழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
கார் ஒன்று விமான நிலையத்தில் இருந்து மீரட் நோக்கி அதிகாலை 3 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அதில் 9 பேர் பயணம் செய்தனர். அப்போது, சாலையின் மறுபுறத்தில் வந்துகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையை 2-ஆக பிரிக்கும் தடுப்பை உடைத்துக் கொண்டு வந்து அந்தக் கார் மீது மோதியது.
இதில் கார் உருக்குலைந்துபோனது. அதிலிருந்த 9 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் லாரியை விட்டு தப்பிச் சென்றார். இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 5 பேர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எஞ்சிய நால்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரி, ஹரியாணா மாநில பதிவெண் கொண்டதாகும். அதனடிப்படையில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம். லாரியின் ஓட்டுநர் கட்டுப்பாடின்றி வாகனத்தை ஓட்டியதாலோ, அல்லது அவர் தூங்கியதாலோ இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று போலீஸார் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT