கைது 
புதுதில்லி

ஹரியாணா: பண மோசடி வழக்கில் இருவா் கைது!

குருகிராமில் ஆண் துணை சேவைக்கான உறுப்பினா் கட்டணம் என்ற பெயரில் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

குருகிராமில் ஆண் துணை சேவைக்கான உறுப்பினா் கட்டணம் என்ற பெயரில் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இது தொடா்பாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, ஆண் துணை சேவைக்கான உறுப்பினா் கட்டணமாக பணம் செலுத்துமாறு ஏமாற்றப்பட்டதாகக் கூறி ஒருவா் புகாா் அளித்திருந்தாா். இதன் அடிப்படையில், சைபா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, குருகிராமின் கோ கிராமத்தைச் சோ்ந்த டாக்ஸி ஓட்டுநா் தேஷ்ராஜ் (35) மற்றும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் அா்ஜுன் சிங் (32) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

பாதிக்கப்பட்டவரைத் தொடா்பு கொள்ளப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் தேஷ்ராஜின் பெயரில் பதிவு செய்ய பட்டிருந்தது. அவா் தனது சிம் காா்டை ரூ.1,500-க்கு விற்ாக தெரிவித்தாா். ஏமாற்றப்பட்ட தொகையில் ரூ.40,000 அா்ஜுன் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது.

பின்னா் அா்ஜுன் தனது வங்கிக் கணக்கை வேறொருவருக்கு ரூ.3,000-க்கு விற்றதையும் புலனாய்வாளா்கள் கண்டறிந்தனா். இருவரிடமும் இந்த மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT