புதுதில்லி

சாக்கடையில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

DIN


நொய்டாவில் திங்கள்கிழமை சாக்கடையில் விழுந்த 6 வயது சிறுவன் செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து என்டிஆர்எஃப் அதிகாரி ஜிதேந்திரா குமார் யாதவ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நொய்டாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சில குழந்தைகளுடன் நொய்டா சாலர்பூர் காதர் கிராமம் அருகே உள்ள சாக்கடையை திங்கள்கிழமை மதியம் கடந்து கொண்டிருந்தான். அப்போது,  சாக்கடைக்குள் சிறுவன் விழுந்தான். இதையடுத்து, நொய்டா காவல் துறையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். 
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். சிறுவனின் உடல் சாக்கடையின் 1,500 மீட்டர் ஆழத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. 
விசாரணையில், இறந்த சிறுவன் நொய்டா செக்டர் 81-இல் உள்ள கிராமத்தைச் சேர்ந்த முதலாம் வகுப்பு மாணவர் சௌரவ் என்பது தெரிய வந்தது என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT