புதுதில்லி

நொய்டா: குடியிருப்புக் காலனி ஜெனரேட்டரில் தீ விபத்து

நொய்டாவில் பாம் ஒலிம்பியா சொசைட்டி குடியிருப்புக் காலனியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர்

DIN

நொய்டாவில் பாம் ஒலிம்பியா சொசைட்டி குடியிருப்புக் காலனியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் செட்டில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை.
இது தொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:   நொய்டாவில் உள்ள பாம் ஒலிம்பியா சொசைட்டி குடியிருப்புக் காலனியில் ஜெனரேட்டர் செட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 
அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. தீவிபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஸ்பைஸ் மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதேபோன்று கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மெத்தனால் கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான எண்ணெய் டிரம்கள் எரிந்து நாசமாகின. இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த திங்கள்கிழமை நடந்தது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT