புதுதில்லி

வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெற்றி: தில்லி அரசு

DIN

புது தில்லி: வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் வெற்றியடைந்துள்ளது என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு 2 -ஆவது நாளிலேயே காற்று மாசு குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 3 மணியளவில் பிஎம் 2.5 துகள்களின் அளவு 58 ஆகக் குறைந்துள்ளதுடன் பிஎம் 10 துகள்களின் அளவு 139 ஆகக் குறைந்துள்ளது.

தில்லியில் காற்றின் தரம் மேம்பட்டு வருகிறது. தில்லியைச் சூழ்ந்திருந்த நச்சுப் புகை மண்டலம் சிறிது சிறிதாக விலகி வருகிறது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தில்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தாலும் தில்லியில் காற்று மாசு குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழைம் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மீறிய 384 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் தில்லியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்துள்ளது என்றாா் அவா்.

இந்நிலையில், வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடா்பாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லி மக்கள் இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு பூரண ஆதரவு அளித்துள்ளனா். மேலும், வாகனங்களைப் பகிா்ந்து கொள்வதையும் நாம் ஆதரிக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT