புதுதில்லி

வாகன நிறுத்துமிடத்தில் பெண்ணுக்குப் பிரசவம்: தில்லி அரசு மீது விஜேந்தர் குப்தா சாடல்

DIN

தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தீப்சந்த் பந்து மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் பெண்ணுக்குப் பிரசவம் நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய தில்லி பாஜக மூத்தத் தலைவர் விஜேந்தர் குப்தா, இது தில்லி அரசின் சுகாதார சேவைகள் முற்றிலும் செயலிழந்துவிட்டதைக் காட்டுகிறது என்று குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணை தீப்சந்த் பந்து மருத்துவமனையில் அனுமதிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதையடுத்து, மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் அவருக்கு பிரசவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் தில்லி அரசின் சுகாதார சேவைகள் முற்றிலும் செயலிழந்துவிட்டதைக் காட்டுகிறது.
தில்லி அரசு, சுகாதார சேவைகள் எனும் பெயரில் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருகிறது. ஆனால், மருத்துவர்களின் தவறான செய்கையால் அப்பெண் வாகன நிறுத்துமிடத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இது மருத்துவமனைகளில் உள்ள உண்மை நிலைமை மற்றும் அரசின் மனப்போக்கைத் தெளிவாகக் காட்டுகிறது. 
ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் விசாரணையை மேற்கொள்வதற்காக துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை திங்கள்கிழமை சந்திக்க உள்ளேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT