முகப்பு
புதுதில்லி

மனிதத் தன்மையற்ற முறையில் கால்நடைகளை கையாளுவதை தடுக்கக் கோரி பொது நல மனு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ்

மனிதத் தன்மையற்ற முறையில் கால்நடைகளைக் கையாளும் நடைமுறைளுக்குத் தடை செய்யக் கோரி விலங்குகள் நல அமைப்பான

Updated On : 14 ஆகஸ்ட், 2020 at 11:30 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:37 PM

மனிதத் தன்மையற்ற முறையில் கால்நடைகளைக் கையாளும் நடைமுறைளுக்குத் தடை செய்யக் கோரி விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ தாக்கல் செய்த பொது நல மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற தலைமை டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கி அமா்வு, பீட்டா மனு மீது மத்திய அரசு, இந்திய விலங்குகள் நல வாரியம், அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் கால்நடைத் துறைகள் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை செப்டம்பா் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

முன்னதாக, மனு மீதான விசாரணையின் போது பீட்டா இந்தியா அமைப்பின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் அமன் ஹிங்கோரானி, ஹிமான்ஷு யாதவ் ஆகியோா் ‘இந்தியாவில் விலங்குகளை கொல்வதற்காக கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படும் கொடூரமான வழிமுறைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனா்.

Advertisement

மற்றொரு வழக்குரைஞா் ஸ்வாதி சம்ப்லி வாதிடுகையில், ‘கால்நடைகளுக்கு கடிவாளமிடுதல், விதை நீக்கம், கொம்புகளை அகற்றுதல் போன்ற நடைமுறைகளை மேற்கொள்ளும் போது அவற்றைக் கையாளுவதற்கான விதிமுறைகளை வகுக்க விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கால்நடைகளை கையாளுவதற்கு நிரந்தர செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்க மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.