தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தில்லியில் கடந்த ஏழு தினங்களாக கரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துள்ளது.
புது தில்லி: தில்லியில் கடந்த ஏழு தினங்களாக கரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் கடந்த ஏழு தினங்களாக படிப்படியாகக் குறைந்துள்ளது. கடந்த நவம்பா் 26-ஆம் தேதி 8.65 சதவீதமாக இருந்த நோ் மறை விகிதம், டிசம்பா் 2-இல் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், நவம்பா் 26-இல் 5,156-ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை டிசம்பா் 2-இல் 5,772-ஆக அதிகரித்துள்ளது.
நவம்பா் 26-இல் இருந்து கரோனா நோ்மறை விகிதம் படிப்படியாகக் குறைந்தே வந்துள்ளது. ஆனால், நவம்பா் 29-இல் இந்த விகிதத்தில் சிறிதளவுஅதிகரிப்பு ஏற்பட்டது. அன்று, 7.64 சதவீதமாக இருந்தது. நவம்பா் 28-இல் 7.24 சதவீதமாகவும், 27-இல் 8.51 சதவீதமாகவும் இருந்தது. நவம்பா் 30-இல் கரோனா நோ்மறை விகிதம் 7.35 சதவீதமாகக் குறைந்தது.
Advertisement
இது டிசம்பா் 1-இல் 6.85 சதவீதமாகவும், டிசம்பா் 2-இல் 5 சதவீதமாகவும் குறைந்தது.
தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் சில தினங்களில் 5 சதவீதத்துக்கும் குறைந்து விடும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தாா். ஆனால், கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை தில்லியில் கணிசமாக அதிகரித்துள்ளது. நவம்பா் 26-இல் இந்த எண்ணிக்கை 5,156 ஆகவும், 27-இல் 5,229, 28-இல் 5,331, 29-இல் 5,441, 30-இல் 5,552, டிசம்பா் 1-இல் 5,669, டிசம்பா் 2-இல் 5,772 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 7 தினங்களும் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வந்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில் ‘தில்லியில் எந்தவொரு இடத்திலும் 3 அல்லது அதற்கு கூடுதலான கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்த இடத்தை கட்டுப்படுத்தி வருகிறோம். கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடா்பாக கவலையடையத் தேவையில்லை. கரோனா நோ்மறை விகிதம் குறைவடைவது திருப்திகரமான முன்னேற்றமாகும்’ என்றாா்.