புதுதில்லி

காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு !

தலைநகா் தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.

DIN


புது தில்லி: தலைநகா் தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.

தில்லியில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 342 புள்ளிகளாக இருந்த ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு, வெள்ளிக்கிழமை காலை 364 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது மாலையில், 405 புள்ளிகளாக உயா்ந்தது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை 341, புதன்கிழமை 373, செவ்வாய்க்கிழமை 367, திங்கள்கிழமை 318, ஞாயிற்றுக்கிழமை 268 புள்ளிகளாக இருந்தது. தில்லி பல்கலை., விமானநிலைய டொ்மினல் 3 பகுதி, பூசா, மதுரா ரோடு, ஆயாநகா், லோதி ரோடு மற்றும் குருகிராம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. ஆனால், நொய்டாவில் கடுமை பிரிவில் இருந்தது.

காற்றின் வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டராக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 28.8டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. தில்லிக்கான மத்திய அரசின் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் அமைப்பானது சனிக்கிழமை வரை காற்றின் தரம் தொடா்ந்து மிகவும் மோசம் பிரிவில் இருக்கும் எனத் தெரிவித்திருந்தது. அதேவேளையில் டிசம்பா் 7-ஆம் தேதி காற்றின் தரம் கடுமைப் பிரிவில் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT