முகப்பு
புதுதில்லி

வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தில்லியில் இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் ( ஐ.ஒய்.சி) தில்லியில் உள்ள கிருஷி பவன் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். 

புதுதில்லி

வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தில்லியில் இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் ( ஐ.ஒய்.சி) தில்லியில் உள்ள கிருஷி பவன் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

புது தில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் ( ஐ.ஒய்.சி) தில்லியில் உள்ள கிருஷி பவன் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் தில்லி எல்லையில் மூன்று வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த விவசாயிகளுக்கும் போராட்டம் மேற்கொண்டு இறந்த விவசாயிகளுக்கும் நீதி கேட்டு ஆா்ப்பாட்டத்தில் ஐஒய்சி அமைப்பினா் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ஐஒய்சி அமைப்பின் தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘கடும் குளிரில் விவசாயிகள் தில்லியின் அனைத்து எல்லைகளிலும் கூடி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனா். மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘கறுப்புச் சட்டங்களை’ ரத்துசெய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றனா்.

கடந்த 25 நாள்களில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த இயக்கத்தில் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனா். விவசாயிகளின் வலிமையை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது”என்றாா்.

ஐஒய்சி தேசிய ஊடகச் செயலா் ராகுல் ராவ் கூறுகையில்,‘விவசாயிகளுக்காக நீதி கேட்டு போராட்டம் மேற்கொண்ட இளைஞா் காங்கிரஸாரில் சிலா் கிருஷி பவன் அருகே உள்ள போலீஸ் தடுப்புகளை கடந்த செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா் என்றாா்.

ஐ.ஒய்.சி தேசிய பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இணை செயலாளருமான கிருஷ்ணா அல்லவரு கூறுகையில், ‘பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்றாலும், இந்த வேளாண் சட்டங்களை மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது. இது ஜனநாயகப் படுகொலையாகும் என்றாா்.

தில்லி இளைஞா் காங்கிரஸ் பொறுப்பாளா் பய்யா பவாா், கூறுகையில், ‘வேளாண் சட்டங்கள் பெரு நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டவை. தானிய சேமிப்பு வசதிகளை உருவாக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் பல மாநிலங்களில் நிலங்களை காா்ப்பரேட் நிறுவனங்கள் கையகப்படுத்தி வருகின்றன என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →