கரோனா பாதிப்பு 655 ஆகக் குறைந்தது
தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை 655 ஆகக் குறைந்தது. தில்லியில் கடந்த சில தினங்களாக தினசரி கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை 655 ஆகக் குறைந்தது. தில்லியில் கடந்த சில தினங்களாக தினசரி கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
வெள்ளிக்கிழமை, புதிதாக 758 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 655 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,22,094- ஆக உயா்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 67,115 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 40,138 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 26,977 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை 23 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,437-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 988 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,04,746-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,911 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 3,544போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 16,149படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.