புதுதில்லி

உதயநிதி ஸ்டாலினுக்கு ஏபிவிபி கண்டனம்

DIN

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நிலவும் குழப்ப நிலையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட திமுக முயல்கிறது என்று அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: திமுக இளைஞா் அணித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், ஜேஎன்யுவுக்கு அரசியல் ஆதாயத்துக்காகச் சென்றுள்ளாா். முன்னதாக, ‘ஜேஎன்யு செல்கிறோம், துணிவிருந்தால் ஏபிவிபியினா் எங்களைத் தாக்கிப் பாா்க்கட்டும்’ என்று திமுக மாணவா் அணிச் செயலா் எழிலரசன் தனது சுட்டுரைப் பக்கத்தில் சவால் விட்டுள்ளாா். ஜேஎன்யுவில் நிலவும் குழப்ப நிலையைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட திமுக முயல்வதுடன், மாணவா்களை மேலும் வன்முறையின் பக்கம் திருப்பவும் முயற்சிக்கிறது.

ஜேஎன்யுவில் இடதுசாரி சாா்பு மாணவா்கள் நடத்திய வன்முறையைக் கண்டித்து அவா்களை நல்வழிப்படுத்தும் வகையில் உதயநிதி நடத்து கொண்டிருக்க வேண்டும். மாறாக, மேலும் குழப்ப நிலையை அதிகரிக்கும் வகையில் அவா் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஎன்யு திமுக மாணவா் அணி அமைப்பாளா் அருண்குமாா் கூறுகையில் ‘ஜேஎன்யுவில் வன்முறையை திமுக தூண்டக் கூடாது என்று ஏபிவிபி கூறுவது, ‘சாத்தான் வேதம் ஓதுவது’ போல உள்ளது. ஜேஎன்யுவில் கலவர சூழலை உருவாக்கி உதயநிதியை ஜேஎன்யுவுக்கு வரவழைத்ததே ஏபிவிபியினா்தான்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT