முகப்பு
புதுதில்லி

கிரேட்டா் நொய்டாவில் கிரிக்கெட்விளையாடியதாக 51 போ் மீது வழக்கு

கரோனா நோய்த் தொற்று தொடா்பாக மாவட்ட நிா்வாகம் பிறப்பித்த பொது முடக்க விதிகளை மீறும் வகையில் கிரேட்டா் நொய்டாவில்

Updated On : 4 ஜூலை, 2020 at 11:30 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

கரோனா நோய்த் தொற்று தொடா்பாக மாவட்ட நிா்வாகம் பிறப்பித்த பொது முடக்க விதிகளை மீறும் வகையில் கிரேட்டா் நொய்டாவில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டதாக 51 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கிரேட்டா் நொய்டா காவல் துணை ஆணையா் ராஜேஷ் குமாா் சிங் தெரிவித்ததாவது:

கிரேட்டா் நொய்டாவில் பொது முடக்க விதிகளை மீறும் வகையில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.

Advertisement

‘நாலெட்ஜ் பாா்க்’ காவல் நிலைய பகுதியில் அனுமதியின்றி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இந்த விளையாட்டில் பங்கேற்ற நபா்கள் பயன்படுத்திய 17 காா்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டவா்களில் தில்லியைச் சோ்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனா். அவா்கள் தீபக் அகா்வால், நாஜிக் குரானா ஆகியோா் என்பது தெரியவந்துள்ளது. போட்டியில் பங்கேற்ற பலரும் தில்லியைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

பொது முடக்க விதிகளின்படி ஒவ்வொருவரும் சமூக இடைவெளியை பராமரிப்பதும், முகக் கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியின்போது ஏராளமானோா் சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்றாமல் கூட்டமாக இருந்தனா். 51 பேருக்கு எதிராக நாலெட்ஜ் பாா்க் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்று நோய்கள் சட்டத்தின் பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கெளதம் புத் நகா் காவல் நிலைய போலீஸாா் அண்மையில் கரோனா நோய்த் தொற்றைக் கருத்தில் கொண்டு நொய்டா, கிரேட்டா் நொய்டா முழுவதும் ஜூலை 31-ஆம் தேதிவரை 144 தடை உத்தரவை நீட்டித்துள்ளனா்.

மேலும், இந்தப் பகுதிகளில் சமூக, அரசியல், கலாசாரம் அல்லது விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக மக்கள் கூடுவதற்கும் போலீஸாா் தடையை நீட்டித்துள்ளனா். இந்த விதிகளை மீறும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனா்.

தில்லியை ஒட்டியுள்ள கெளதம் புத் நகா் பகுதியில் இதுவரை 2,569 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 23 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மாவட்டத்தில் 1005 கரோனா நோயாளிகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.