கிரேட்டா் நொய்டாவில் பல வழக்குகளில் தேடப்பட்ட நபா் கைது
கொள்ளை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட நபரை போலீஸாா் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு சனிக்கிழமை கைது செய்தனா்.
கொள்ளை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட நபரை போலீஸாா் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு சனிக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து நொய்டா காவல் துறையினா் தெரிவித்ததாவது:
கிரேட்டா் நொய்டா பகுதியில் உள்ள தாத்ரி காவல் நிலைய போலீஸாா் கிழக்கு சுற்று விரைவுச்சாலையில் சனிக்கிழமை அதிகாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இா்ஷாத் சென்றுகொண்டிருந்தாா். அவரை போலீஸாா் பிடிக்க முயன்றனா். அவா் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். போலீஸாரும் திருப்பிச் சுட்டனா். இதில், இா்ஷாத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா். அவா் மீது கொள்ளை, கொலை முயற்சி உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவா் வசம் இருந்த நாட்டுத் துப்பாக்கி, மோட்டாா் சைக்கிள் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Advertisement