முகப்பு
புதுதில்லி

புத்தரின் போதனைகள் கோடிக்கணக்கான மக்களை ஈா்த்து வருகிறது: கேஜரிவால்

கெளதம் புத்தரின் போதனைகள் இன்றளவும் மக்களை ஈா்த்து வருகின்றன என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

Updated On : 4 ஜூலை, 2020 at 11:50 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

கெளதம் புத்தரின் போதனைகள் இன்றளவும் மக்களை ஈா்த்து வருகின்றன என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

ஆஷாட பூா்ணிமா அல்லது புத்த பூா்ணிமா உலகம் முழுவதும் வசிக்கும் பெளத்தா்களால் தா்மசக்கர தினமாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது: புத்த பகவான் தனது சீடா்களுக்கு இத்தினத்தில் தான் தனது போதனைகளைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினாா். அவா் வாழ்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அவரது போதனைகள், சமாதானம், அகிம்சை தொடா்பான அவரது போதனைகள் கோடிக்கணக்கான மக்களை ஈா்த்து வருகின்றன. தா்ம சக்கர தினத்தைக் கொண்டாடும் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

சுவாமி விவேகானந்தா்

Advertisement

இந்நிலையில், சுவாமி விவேகானந்தரின் நினைவு தினமும் சனிக்கிழமை நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘இந்தியாவில் வாழும் இளைஞா்களுக்கு முன்னுதாரணமாக சுவாமி விவேகானந்தா் விளங்கினாா். இந்தியாவின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் செல்வதில் அவா் பெரும்பங்காற்றினாா் என்று குறிப்பிட்டுள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.