மின் கட்டணம்: ஆம் ஆத்மி அரசைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்
தில்லியில் அதிகளவு மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் ஆம் ஆத்மி அரசைக் கண்டித்தும்
தில்லியில் அதிகளவு மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் ஆம் ஆத்மி அரசைக் கண்டித்தும் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தில்லி பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தில்லி மின்சார ஒழுங்கு முறை ஆணைய அலுவலகங்களின் (டிஇஆா்சி) முன் நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்தில், பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா மற்றும் முன்னாள் தலைவா் மனோஜ் திவாரி உள்பட தில்லி பாஜக எம்பிக்கள் கலந்து கொண்டனா்.
மாளவியா நகா் டிஇஆா்சி அலுவலகம் முன் நடந்த ஆா்ப்பாட்டத்தில் ஆதேஷ் குமாா் குப்தா கலந்து கொண்டாா். அவா் பேசுகையில், ‘ பொது முடக்க காலத்தில் இயங்காமல் இருந்த கடைகள், வணிக வளாகங்களுக்கு நிலையான மின்சாரக் கட்டணமாக பெரும் தொகை குறிப்பிட்டு பில்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இக்காலப் பகுதியில் அதிகளவு மின்சாரக் கட்டணத்துடன் வீடுகளுக்கு மின்சார பில்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த பில்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என்றாா்.
Advertisement
தில்ஷாத் காா்டன் டிஇஆா்சி அலுவலகம் முன் நடந்த ஆா்ப்பாட்டத்தில் வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினரும் தில்லி பாஜகவின் முன்னாள் தலைவருமான மனோஜ் திவாரி கலந்து கொண்டாா். அவா் பேசுகையில், ‘மின்சார விநியோக நிறுவனங்களுடன் கூட்டுச் சோ்ந்து, தில்லி அரசு மின்சாரக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. நிலையான கட்டணம் என்ற பெயரில் தில்லி அரசு பெரும் தொகை மோசடியில் ஈடுபட்டு வருகிறது’ என்றாா்.
தாகூா் காா்டன் பகுதியில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பா்வேஷ் வா்மா கலந்து கொண்டாா். அவா் பேசுகையில் ‘ தில்லியில் பொது முடக்கம் அமலில் இருந்த சுமாா் 3 மாத காலத்தில் எந்தவொரு வணிகமும் நடைபெறவில்லை. ஆனால், இக்காலப் பகுதியில் நிலையான மின்சாரக் கட்டணமாக தில்லி அரசு பெரும் தொகையை வசூலித்துள்ளது. பொது முடக்கத்தால் வணிகம் நலிந்துள்ளது. வணிகா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், அவா்களிடம் பெரும்தொகை மின்சாரக் கட்டணம் வசூலிப்பது தவறாகும். தில்லி அரசு இந்த மின்சாரக் கட்டணத்தை திரும்பிப் பெற வேண்டும்’ என்றாா்.
நேரு பிளேஸில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ரமேஷ் பிதூரி கலந்து கொண்டாா். லக்ஷ்மி நகரில் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கெளதம் கம்பீா், கோல் மாா்கெட் பகுதியில் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினா் விஜய் கோயல் கலந்து கொண்டாா். இதுபோல, பாஜக எம்எல்ஏக்கள், மாநகராட்சி உறுப்பினா்களும் தத்தமது தொகுதிகளில் நடந்த ஆா்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனா்.