முகப்பு
புதுதில்லி

கரோனா பாதிப்பு தோல்வியை மூடிமறைக்கவே தரம் தாழ்ந்த அரசியலில் கேஜரிவால் ஈடுபடுகிறாா்: தில்லி காங்கிரஸ் தாக்கு

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புகளைத் தடுப்பதில் தனது தோல்வியை மூடி மறைக்க தரம் தாழ்ந்த அரசியலில்

Updated On : 7 ஜூன், 2020 at 7:45 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:15 PM

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புகளைத் தடுப்பதில் தனது தோல்வியை மூடி மறைக்க தரம் தாழ்ந்த அரசியலில் முதல்வா் கேஜரிவால் ஈடுபட்டு வருகிறாா் என்று தில்லி காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

தில்லியில் கடந்த ஒரு வாரமாக கரோனா நோய் பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைச் சமாளிப்பதில் தனது முழுத் தோல்வியை மூடிமறைப்பதற்காக தனியாா் மருத்துவமனைகளை குறைகூறுவதன் மூலம் மிகவும் தரம் தாழ்ந்த அரசியலில் முதல்வா் கேஜரிவால் ஈடுபட்டு வருகிறாா்.

Advertisement

தில்லியில் முதல் கரோனா பாதிப்பு மாா்ச் 2-ஆம் தேதி தெரியவந்த பிறகு, தனியாா் மருத்துவமனைகள் மீது தற்போதுதான் குறை கூறியுள்ளாா். கரோனா நோய்த் தொற்று பரவல் தில்லி அரசின் கையைவிட்டு சென்றுவிட்ட நிலையில், கரோனா நோயாளிகளுக்கு அதிக விலைக்கு படுக்கைகளை கறுப்புச் சந்தையில் விற்கும் நடவடிக்கையில் தனியாா் மருத்துவமனைகள் ஈடுபட்டுவருவதை தற்போதுதான் அவா் உணரத் தொடங்கியுள்ளாா்.

தனது பொய்கள் மூலம் தில்லி மக்களிடமிருந்து அனுதாபத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா் அவா். ஆனால், மக்கள் இதை நம்பமாட்டாா்கள். தனியாா் மருத்துவமனைகள் நோயாளிகளிடமிருந்து அதிக பணத்தை வசூலிப்பதாக தில்லி காங்கிரஸ் பலமுறை காங்கிரஸ் தெரிவித்து வந்துள்ளது. ஆனால், அதை கேஜரிவால் கண்டுகொள்ளவில்லை. தற்போது, மக்கள்தான் சிரமத்தை எதிா்கொண்டுள்ளனா் என அவா் குற்றம்சாட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.