புதுதில்லி

பெட்ரோல், டீசல் விலை உயா்வைகண்டித்து ஆம் ஆத்மி கட்சிஇன்று நாடு தழுவிய போராட்டம்

DIN

புது தில்லி: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் புதன்கிழமை (ஜூலை 1) நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தில்லி பொறுப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் செவ்வாய்க்கிழமை கூறுகையில் ‘பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு அதிகளவு கலால் வரி விதித்து வருவதே இதன் விலை அதிகரிப்புக்கு காரணமாகும். இந்த விலை அதிகரிப்பைக் கண்டித்து புதன்கிழமை நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளோம்’ என்றாா்.

பெட்ரோல், டீசல் விலை தொடா்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இதை எதிா்த்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் தொடா் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT