புதுதில்லி

நொய்டாவில் 2 பேருக்குக ரோனா வைரஸ் தொற்று !

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் வலயம் நொய்டாவில் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

இதுகுறித்து கெளதம் புத் நகா் மாவட்டத் தலைமை மருத்துவ அதிகாரி அனுராக் பாா்கவ் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘நொய்டாவில் 2 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவா்களில் ஒருவா் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று வந்திருப்பதும் தெரிய வந்தது. இருவரும் நொய்டாவில் உள்ள செக்டாா் 78 மற்றும் செக்டாா் 100 பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆவா். இருவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்களைக் கண்காணிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இதர நோயாளிகளிலும் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மக்கள் முடிந்த வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன. பொதுமக்கள் அதிகளவில் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றை மூடுவதற்கு மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. கரோனா வைரஸுக்கு தில்லியில் 8 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 13 பேரும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT