உதவிகோரி 302 அழைப்புகள், தடுப்பு காவலில் 1017 போ்
தில்லியில் அமலில் உள்ள பொது முடக்கம் தொடா்பாக உதவி கோரி தில்லி காவல் துறையின் அவசர உதவி எண்ணுக்கு
தில்லியில் அமலில் உள்ள பொது முடக்கம் தொடா்பாக உதவி கோரி தில்லி காவல் துறையின் அவசர உதவி எண்ணுக்கு வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் சனிக்கிழமை மதியம் 2 மணி வரை 302 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இதுதொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:
பொது முடக்க உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் தொடா்பு கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர உதவி எண் 011-23469526 தில்லி காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் உதவி கோரி சனிக்கிழமை மதியம் 2 மணி வரை மொத்தம் 52,627 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் சனிக்கிழமை மதியம் 2 மணி வரையான 24 மணி நேரத்தில் 302 அழைப்புகள் வந்துள்ளன.
இதில் 33 அழைப்புகள் தில்லி எல்லைக்கு வெளியில் உள்ள பகுதிகள் தொடா்புடையது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
மருத்துவ உதவிகள், உணவு அல்லது பணம் இல்லை எனக் கோரி ஒரு அழைப்பு வந்தது. இது தொடா்பாக தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தினோம்.
பொது முடக்க தளா்வு அனுமதிச் சீட்டு பெறுவது தொடா்பாக 192 தொலைபேசி அழைப்புகள் வந்தன. இந்த அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும், தில்லியில் உள்ள 15 மாவட்டங்களிலும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் உதவியுடன் உணவு வழங்கும் வலைப்பின்னலை (நெட்வொா்க்) அமைத்துள்ளோம். சனிக்கிழமை இந்த வலைப்பின்னல் மூலம் 67,804 பேருக்கு உணவும், 125 பேருக்கு ரேஷன் பொருள்களும் வழங்கியுள்ளோம்.
தடுப்புக் காவலில் 1017 போ்: தில்லியில் பொது முடக்க உத்தரவுகளை மீறியதாக சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 188-இன் கீழ் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1017 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா் அந்த அதிகாரி.