முகப்பு
புதுதில்லி

ரோஹ்தக் சாலை மறுசீரமைப்பு பணியை தொடக்கி வைத்தாா்: முதல்வா் கேஜரிவால்

தில்லி ஜாகிராவில் இருந்து ரோஹ்தக் வரையான ரோஹ்தக் சாலையை மறு சீரமைப்பு செய்யும் பணியை தில்லி முதல்வா் அரவிந்த்

Updated On : 7 நவம்பர், 2020 at 3:56 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:19 PM

தில்லி ஜாகிராவில் இருந்து ரோஹ்தக் வரையான ரோஹ்தக் சாலையை மறு சீரமைப்பு செய்யும் பணியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது தில்லி பொதுப் பணித்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உடனிருந்தாா்.

நிகழ்வில் கேஜரிவால் பேசுகையில் ‘தில்லியில் பல திட்டங்களை திட்டமிட்ட காலப்பகுதிக்கு முன்பாகவும், ஒதுக்கப்பட்ட நிதியை விடக் குறைவான தொகையிலும் தில்லி அரசு முடித்தது. இதனால், காலமும், பணமும் பெருமளவில் சேமிக்கப்பட்டன. இந்த 13.33 நீளமான ரோஹ்தக் சாலையை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மறுசீரமைக்கப்பட்டால் மக்களின் பயண நேரம் பெருமளவில் குறையும் என்றாா் அவா்.

சத்யேந்தா் ஜெயின் பேசுகையில் ‘இந்த மறுசீரமைப்பு பணிகளை 6 மாதங்களுக்குள் முடிப்பதாக காலக்கெடு விதித்துள்ளோம். ஆனால், இதை 4 மாதங்களுக்குள் விரைந்து முடிக்க முடிவு செய்துள்ளோம். ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கம் போல் இந்தத் திட்டத்திலும் நிதியை சேமிக்க முயற்சிப்போம். இந்த சாலை மறுசீரப்பில் கோல்ட்-மில்லிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

Advertisement

இந்த சாலை முதலில் தில்லி பொதுப் பணித்துறையால் 2011 இல் கட்டப்பட்டது. பிறகு, 2016 மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.